Tuesday, December 22, 2020

முழுசா படி நண்பா..

 *முழுசா படி நண்பா...* 

அன்பின் வலி, நட்பின் வலி, உறவின் வலி, காதலின் வலி.. இவைகளில் சிக்கி பழக்கப்பட்டவர்கள் ஒரு காலத்தில் இந்த வலியை அனுபவிக்க விரும்பத் தொடங்கி விடுவார்கள்.. 

வலியை விரும்புவது ஒரு உளவியல் நோய்..

இவர்கள் சோகப்படல்களைக் கேட்பார்கள், மற்றவர்களிடமிருந்து தங்களை தனிமைப்படுத்திக் கொள்வார்கள், சிரிப்பது போல் நடிப்பார்கள்.. இவர்கள் ஆபத்தான முடிவுகளை எடுக்க வாய்ப்புகள் அதிகம்..

சுய பரிதாபம் இவர்களுக்கு அதிகம் இருக்கும், இவர்களது எழுத்து, பேச்சு, ஓவியம், சமூக ஊடங்களின் செயல்பாடுகள், முகப்புப் படங்களின் மூலம் இவர்களைக் கண்டுபிடிக்க முடியும்.. ஆனால்  அதற்குக் கொஞ்சம் உளவியல் அறிவும் அவர்களோடு நல்ல பழக்கமும் இருக்க வேண்டும்...

நம் சமுதாய அமைப்பு சுயநலமானது. ஒரே வகுப்பில் படிக்கும் இரண்டு மாணவர்களில் யார் முதலில் வருவது என்னும் போட்டியை உருவாக்குவது, ஒரே அலுவலகத்தில் பிரித்தாளும் சூழ்ச்சி செய்வது போன்றவை அன்பு, நேசம் போன்றவற்றை மனித இதயத்திலிருந்து பிரித்து மலையேற்றி விடுகிறது.

உங்கள் அன்பிலும் அரவணைப்பிலும் எண்ணெய் ஊற்றுங்கள்.. நேசம் எரியும் நெருப்பாகட்டும்...

உங்கள் மடியும் மார்பும் உங்கள் நேசத்தைப் பகிரும் இடங்களாகத் தாருங்கள்.. தேவனுடைய மடியில் அவருடைய குமாரன், இயேசுவின் மார்பில் அவருடைய ஸ்நேகிதன்...

உங்கள் தோளிலும் உங்கள் கற்பத்திலும் நண்பர்களை சுமந்துகொள்ளுங்கள்.. தேவன் சுமப்பது போல...

நண்பர்களை நினைத்திருங்கள்.. உள்ளங்கைகளில் வரைந்து வைத்துக் கொள்ளுங்கள்.. 

உங்களைப் போலவே உஙகள் நண்பர்களை எண்ணுங்கள்.. 

உதவி செய்யும் போது அப்பார்ட்மெண்ட் ஆளாக இருந்தாலும் குப்பத்து கோபாலாக மாறிவிடுங்கள்... கேட்காமலே வந்து நில்லுங்கள்...

இனிமே நமக்குத் தெரிஞ்ச எவனும் "எனக்கு யாரும் இல்லனு" சொல்லக்கூடாது.. அப்பிடி சொன்னா நமக்கும் யாரும் இல்லன்னு அர்த்தம்..

கதவைத் தட்டாமலே உள்ளே வா.. என் நண்பா...