Sunday, October 3, 2021

ஏழைகளிடத்தில் விதைப்பது.. (மோகன் சி மற்றும் மோகன் ஜி கவனத்திற்கு)

 2 கொரிந்தியர் 9 - 

"சிறுக விதைக்கிறவன் சிறுக அறுப்பான், பெருக விதைக்கிறவன் பெருக அறுப்பான்" (6 ஆம் வசனம்)

இந்த உவமை ஏழைகளுக்குக் கொடுப்பதைக் குறித்துசொல்லப்பட்டிருக்கிறது. முழு அதிகாரத்தையும் வாசித்தால் புரியும். காணிக்கை என்று தலைகால் புரியாமல் பேசக்கூடாது.

"பரிசுத்தவான்களுக்குச் செய்யவேண்டிய தர்மசகாயத்தைக்குறித்து....

2 கொரிந்தியர் 9:1"

"வாரியிறைத்தான், ஏழைகளுக்குக் கொடுத்தான், அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும் என்று எழுதியிருக்கிறபடியாகும். 

2 கொரிந்தியர் 9:9"

ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்கு கடன் கொடுக்கிறான் என்று வேத வசனம் சொல்கிறது. கட்டாயமல்ல, மன விருப்பதின்படியே. 

உண்மையில் கஷ்டப்பட்டும் பரிசுத்தவான்கள், உண்மையில் கஷ்டப்படும் ஏழைகள் (யாராக இருந்தாலும்) அவர்களுக்குக் கொடுப்பது தான் மிகச் சிறந்த முதலீடு. ஏற்கனவே பண வெள்ளத்தில் திளைக்கும் போதகர்களுக்கு மேலும் அள்ளிக்கொடுப்பது பணத்தை வீனடிப்பது போன்றது.