Sunday, July 4, 2021

ஓநாய்களுக்கு எச்சரிக்கை

ஓநாய்களை இனங்கண்டுகொள்ள நல்ல தருணத்தை ஏற்படுத்திய கர்த்தருக்கு நன்றி. மக்கள் விழித்துக்கொள்ள வேண்டிய நேரமிது. வேத வசனத்திலும் நீதியிலும் புரட்சி எழும்பாவிடில் அனைத்தும் சூறையாடப்படும்.. ஆம்.. அனைத்தும்... முட்டு கொடுத்தே வாழ்ந்து பழகிய விசுவாசிகளே, நாளை அந்திக்கிறிஸ்துவுக்கும் முட்டு கொடுக்க வேண்டி வரலாம். 

எதிர்ப்பு சக்தி இல்லாத விசுவாசிகளை நினைத்து வேதனைப்படுகிறேன். எதிர்ப்பு சக்தியை இழந்தால் நோயால் தாக்கப்படுவது உறுதி. ந#ம் முற்பிதாக்கள் தங்கள் உயிரையும் மதிக்காமல் தவறான ஊழியங்களைக் களைந்து ஏற்படுத்திய நல்ல பாதையில் நடந்தவர்கள், கள்ள ஊழியர்களை உள்ளே அனுமதித்து விட்டு அடுத்த தலைமுறைக்கு எந்தப் பாதையை விட்டுச் செல்லப் போகிறீர்கள்.. 

விசுவாசிகளிடம் பணத்தை சுரண்டும் ஓநாய்கள் ஒன்று சேர்ந்து அனைவரையும் வஞ்சிக்கும் காலமிது. அனைவரும் சேர்ந்து எதிர்த்தால், தப்பித்துக் கொள்ளலாம். எதிர்ப்பது சிலர் மட்டுமென்றால் அவர்கள் மட்டும் அந்த ஓநாய்களால் சபைகளை விட்டு புறம்பாக்கப்படுவார்கள். 

ஒரே ஒரு வசனத்தை நினைவில் கொள்ளுங்கள் (இயேசு, இது போன்ற ஓநாய்களைக் குறித்து சொன்ன வசனம்): அந்தந்த மரம் அதனதன் கனியினால் அறியப்படும்; முட்செடிகளில் அத்திப்பழங்களைப் பறிக்கிறதுமில்லை, நெருஞ்சிச்செடியில் திராட்சப்பழங்களைப் பறிக்கிறதுமில்லை. (லூக்கா 6 : 44)

#we_stand_with_jesus

No comments:

Post a Comment