Wednesday, December 15, 2021

2022 கிறிஸ்தவர்களுக்கு எப்படி இருக்கும்?

 2022 எப்படி இருக்கும்? :

1. பல போதகர்கள் வீட்டில் ரெய்டு நடக்கும், கிலோ கணக்கில் தங்கமும் கணக்கில் வராத பலகோடி பணமும் சிக்கும்.

2.ஏமாற்றப்பட்ட / கைவிடப்பட்ட விசுவாசிகளின் எண்ணிக்கை கணிசமான அளவில் உயரும்.

3. கிறிஸ்தவர்களுக்கு அரசியலில் முக்கிய இடங்கள் கிடைக்கும், சில போதகர்கள் தங்களை தற்காத்துக்கொள்ள பாஜகவில் சேருவார்கள்.

4. கிறிஸ்தவர்களைத் தாக்கி பல திரைப்படங்கள் வரும், அது ஊடகங்களில் விவாதிக்கப்படும். 

5. சுவிசேஷம் சொல்லப்போகும் இடங்களில் எதிர்ப்பும் தாக்குதலும் கிடைக்கும். காரணம் தீர்க்கதரிசன எண் 1-ல் உள்ளது.

6. கொரோனா மறக்கப்பட்டும். அதை விட கொடிய கிருமிகள் பேசப்படும். (அதுவும் எண் 1-ல் உள்ள கிருமிகள் அதிகம் பேசப்படும்)

7. ஆராதனை செய்கிற சில முக்கிய புள்ளிகள் ஹெலிகாப்டர் வாங்குவார்கள்.

8. ஆராதனைப் பாடல்களுக்கு அனுமதி பெறாமல் ராகம் திருடப்பட்டதால், சினிமா இசையமைப்பாளர்கள் நஷ்ட ஈடு கோருவார்கள்.

9. ஹைப்பர் கிரேஸ் உபதேசத்தில் இயேசு என்பவர் விருப்பத் தேர்வாக மாற்றப்படுவார். இயேசு இல்லாமலும் ஹைப்பர் கிரேஸ் இருக்கும் என்பார்கள்.

10. இதுவரை இயேசுவின் வருகையைக் குறித்து தாறுமாறாக (பிழையாக) பேசிய சிலர், இயேசு வரமாட்டார் என்று வெளிப்படையாக சொல்ல ஆரம்பித்துவிடுவார்கள். 

பின்குறிப்பு : நான் தீர்க்கதரிசியுமல்ல, மேலே சொல்லப்பட்டவை தீர்க்கதரிசனமுமல்ல. போகிற போக்கை வைத்து கணித்த சில எச்ச துண்டுகள். இவற்றில் சில காரியங்கள் நடப்பதை நாம் தடுக்க முடியாது. ஆனால் இவற்றை விட அதிக வேகத்துடன் உண்மையுள்ளவர்களின் ஓட்டம் இருக்க வேண்டும் என்பதே என்னைப் போன்றவர்களின் வாஞ்சை.

No comments:

Post a Comment