Thursday, March 5, 2020

உந்தன் தயவில்

உந்தன் தயவில் எழுந்தேன், மீண்டும் விழுந்த போதும்
தேடி வந்து கண்டீர்,
ஓடி ஒளிந்த போதும்.

கேளும் ஆண்டவரே,
மன்னியுமே
கவனியும் ஆண்டவரே
தாமதியாமலே..(2)

மரணம் எந்தன் சம்பளம்;
அதை ஏற்றுக் கொண்ட தேவா.
கிருபைவரமோ ஜீவன்;
அதை பெற்றுத்  தந்தீரே..

சூழ்ந்ததே என்னைப் பேரிருள்
வெளிச்சம் தாரும் தேவா
இழுத்தது கடலின் பேரலை
கரத்தைத் தாரும் தேவா

நித்தம் என்னை நடத்தும் - என்
ஆத்துமாவை தேற்றும்
வறண்ட வாழ்வில் வாரும்
நீரூற்றாய் மாற்றும்


பூட்டின வீட்டின் உள்ளே
வந்து நின்றீர் தேவா - என்
இதய வீட்டில் வாரும்
சமாதானம் தாரும்..

No comments:

Post a Comment