Saturday, February 22, 2020

நம்முடைய யுத்தம் முடியவில்லை

நம்முடைய யுத்தம் முடியவில்லை

நம்முடைய யுத்தம் கல்வாரி சிலுவையில் முடிந்துவிட்டதாக ஆன்ரு வாம்மேக் என்னும் ஊழியர் எழுதிய புத்தகத்தைப் பிடிக்க நேர்ந்தது. முழுமையான வேதத்தைப் புரிந்து கொண்ட யாரும் அவருடைய கூற்றுகளை ஏற்றுக்கொள்வதில்லை.

மனுக்குலத்திற்கு விரோதமாக இடப்பட்டிருந்த கட்டளைகளை இயேசு சிலுவையில் வெற்றி சிறந்தார். அதாவது நியாயப்பிரமானம் என்பதை செல்லாக் காசக்கி, அன்பு என்னும் புதிய பிரமானத்தை மனித குலத்திற்கு வகுத்துக் கொடுத்தார். (கொஞ்சம் ஆழமாக கொலோசெயர் 2:13-15ஐ படிக்கவும். புரியவில்லை என்றால் விட்டுவிடுங்கள்).

நம்முடைய போராட்டங்கள் முடியவில்லை என்றும், அந்த போராட்டங்களை ஆவியின் ஆயுதங்களைப் பயன்படுத்திக் கொண்டு எதிர்கொள்ள வேண்டும் என்றும் வேதம் நமக்கு போதிக்கிறது. (எபேசியர் 6 : 12-17)

நோய் எதிர்ப்பு சக்தி இல்லாத சரீரம் எப்படி சாக நேரிடுமோ, அது போலவே, ஆவிக்குரிய போராட்டங்களை எதிர்கொள்ள முடியாதவர்களும் ஆவிக்குரிய மரணத்தை எதிர்கொள்ள நேரிடும்.

ஆனால், கிறிஸ்துவின் பிரமாணம் யுத்தத்தில் வெற்றி பெற வழியையும், தேவனுடைய ஆவியானவர், யுத்தத்தை எதிர்கொள்ள பெலனையும் தருகிறார். ஆவிக்குரிய யுத்தத்தில் தேவன் ஒருவரையும் தனித்து விடுவதில்லை.

ஆனால், தூக்கம், உணவு, சோம்பல் மற்றும் கொஞ்சம் விசுவாசம் சேர்த்துக் கொண்டு, எனக்கு வெற்றி கிடைத்துவிடும் என்று நினைப்பவர்களுக்கு, வெற்றியின் கனியை ஆன்ரு வாம்மேக் செலவு செய்து வாங்கிக் கொடுப்பார் என்றால், எனக்கு ஆட்சேபனை இல்லை. 

No comments:

Post a Comment