Wednesday, February 19, 2020

பாவிகளுக்கு வைத்தியன் இயேசு

தவறே செய்யாதவர்கள் இந்த உலகத்தில் இல்லை. ஒருவகையில் பார்த்தால், குறைந்த அளவில் தவறு செய்தவர்களை விட, அதிக அளவில் தவறு செய்தவர்கள், அதிலிருந்து மனந்திரும்பும்போது மீண்டும் அந்தத் தவறுகளை செய்வதற்கான வாய்ப்பு குறைவு.

இன்றைக்கு இருக்கும் ஒருவனுடைய வீழ்ச்சியை வைத்து தீர்ப்பு செய்வது மனிதனுடைய சுபாவம். ஆனால் தேவனோ, பாவத்தில் வாழ்பவர்களை தீர்ப்பு செய்வதற்கு முன் வாய்ப்புகளைத் தருகிறார்.

இயேசு, அந்த வழியில், பெரிய நீதிமான்களைக் குறித்து அதிக கவலைப்படாமல், பாவிகளிடமே தன் ஊழியப் பயணத்தைத் தொடங்குகிறார். அதில் அவரால் மீட்டுக்கொள்ளப்பட்டவர்கள், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக, விசுவாசம் என்னும் நூலில் சந்ததியாகக் கட்டப்பட்டு கிறிஸ்துவுக்கு சாட்சிகளாக இருக்கிறோம்.

*இயேசு : பிணியாளிகளுக்கு வைத்தியன் வேண்டியதேயல்லாமல் சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை, நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்கவந்தேன்.

மாற்கு 2:17*


No comments:

Post a Comment