Friday, February 21, 2020

இயேசுவின் அன்பைப் பெற்றால் மட்டும் போதுமா?

இயேசுவிடம் நித்திய ஜீவனைக் குறித்து கேள்வி கேட்டான் ஒரு பணக்கார வாலிபன்.

"நல்ல போதகரே, நித்திய ஜீவனை சுதந்தரித்துக் கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?" என்று.

இயேசு அவனிடம் அன்புகூர்ந்து, அவனிடம் உள்ளவற்றை விற்று ஏழைகளுக்குக் கொடுத்துவிட்டு, பின்பு தன்னை பின்பற்றி வரச்சொன்னார்.

ஆனால் அந்த வாலிபன் இந்த கண்டிஷன் பிடிக்கமல், துக்கத்தோடு போய்விட்டான்.

இயேசு அவனிடம் அன்புகூர்ந்தார். ஆனால் அவனோ தன் சொத்தை அதிகமாக நேசித்தான்.

இதிலிருந்து ஒன்று மட்டும் புரிகிறது. வாழ்க்கையில் இயேசுவின் அன்பைப் பெற்றால் மட்டும் போதாது. அவர் எதிர்பார்க்கும் காரியங்களை நம்மிடம் இருந்து விட்டகற்ற வேண்டும். அப்போது தான் நித்திய ஜீவனை உத்தரவாதமாகச் சொல்லமுடியும். 

No comments:

Post a Comment