Monday, September 7, 2020

யாருக்கு மேன்மை?

ஒரு பிரசங்கியார் மேடை போட்டு ஒரு மணிநேரம் தாவீதைப் பற்றி பெருமையாகவும் சவுலைப்பற்றி சிறுமையாகவும் பேசிக்கொண்டிருந்தார். ஒரு வாலிபன் எழுந்து, "ஐயா, தாவீதைப் பற்றி பெருமையாக பேசுகிறீர்கள், ஆனால் அவர் செய்த பாவங்களில் சில, சவுல் செய்த பாவங்களை விட கொடுமையானது" என்றான்.

பிரசங்கியார் வீட்டிற்குச் சென்று தாவீது மற்றும் சவுலின் பாவங்களை  ஒரு பட்டியல் போட்டார். அவருக்கு அதிர்ச்சி என்னவென்றால், தாவீதின் ஒரு குறிப்பிட்ட பாவம் சவுலின் மொத்த பாவத்தையும் அடித்து சாப்பிடுவது போல் இருந்தது.

பிறகுதான் புரிந்து கொண்டார், இனிமேல் மேன்மையாகப் பேச வேண்டியது பாத்திரங்களைப் பற்றியல்ல. பாத்திரங்களை உருவாக்கி அவர்களைப் பயன்படுத்தும் தேவனைப் பற்றிதான் என்று.

ஒரு புதிய உடன்படிக்கை விசுவாசி, கிறிஸ்துவைப் பற்றியும் அவருடைய சிலுவையைப் பற்றியுமே பேச வேண்டும். எந்த சாட்சியைப் பேசினாலும், அந்த சாட்சியை உருவாக்கிய கர்த்தரையே மேன்மைபாராட்ட வேண்டும். 

தாவீதைப் பெருமையாகப் பேசும் சில பிரசங்கியார்கள், பிற்காலங்களில் பாவங்களில் விழும்போது, அதே தாவீதின் பாவங்களை மறைவிடமாகவும் புகலிடமாகவும் பயன்படுத்துவது துரதிஷ்டவசமானது. கிறிஸ்து தான் நமக்கு எல்லாவற்றிலும் முன்மாதிரி. அவரிடத்தில் பிழை ஒன்றுமில்லை.

*மேன்மைபாராட்டுகிறவன் கர்த்தரைக்குறித்தே மேன்மைபாராட்டக்கடவன். - 2 கொரிந்தியர் 10:17*

*நானோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சிலுவையைக் குறித்தேயல்லாமல் வேறொன்றையுங்குறித்து மேன்மைபாராட்டாதிருப்பேனாக. அவரால் உலகம் எனக்குச் சிலுவையிலறையுண்டிருக்கிறது, நானும் உலகத்திற்குச் சிலுவையிலறையுண்டிருக்கிறேன். கலாத்தியர் 6:11*

#கிறிஸ்துவின்_சிலுவையை_மேன்மை #தேவனுக்கே_மகிமை 

- முகில்

No comments:

Post a Comment