Thursday, September 2, 2021

உருமாறிய கிறிஸ்தவ "மதம்" எச்சரிக்கை

 உருமாறிய கிறிஸ்தவ "மதம்" எச்சரிக்கை:

அடுத்த தலைமுறைக்கான தன்னலமற்ற சிந்தை இல்லை என்றால் இன்னும் ஒரு சில ஆண்டுகளில் தமிழநாட்டில் கிறிஸ்தவம் அழிந்துவிடும். நம் மிஷனரி முற்பிதாக்கள் செய்த தன்னலமற்ற சேவைகளை (சொந்த சொத்துக்களை விற்று பள்ளிக்கூடம் கட்டுவது, மருத்துவமனைகள் கட்டுவது, எளியவர்களுக்கு உதவிசெய்வது போன்றவற்றை) செய்யாதபட்சத்தில் இப்போது இருக்கும் விசுவாசிகள் வேண்டுமென்றால் பழக்க தோஷத்தில் மதத்தலைவர்களான பாஸ்டர், பாதர்களுக்கு ஜாலரா போடலாம். ஆனால் அடுத்த தலைமுறை இந்த மார்க்கத்தில் இருக்க வேண்டிய அவசியத்தை நிச்சயம் கேள்விகேட்பார்கள். இங்கே இயேசு சொன்ன அன்பும் பரிவும் தவிர அனைத்தும் நடக்கிறது என்றபோது நான் ஏன் இந்த மதத்தில் இருக்க வேண்டும்? நான் வீட்டிலேயே கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவனாக இருந்துவிடலாமே. தங்கள் வசதிக்காக நிதி திரட்டுவதையும், பெரிய பட்ஜட்டில் பிரம்மாண்டமான ஆலயம் கட்டுவதையும் மட்டுமே நோக்கமாகக் கொண்டிருக்கும் யாரையும் தேவன் அவருடைய ராஜ்யத்தில் அனுமதிக்கக் கூடாது என்பதே என்னைபோன்றவர்களின் ஜெபமாக இருக்கிறது. மேலும் கிறிஸ்துவின் வார்த்தைகளுக்கு மதிப்பளிக்க வேண்டிய விசுவாசிகளை தங்கள் சுய கட்டுப்பாட்டு வலைக்குள் வைத்திருக்கும் அனைத்து முகத்திரைகளையும் கிழிக்கவேண்டும். அதற்கான காலம் வரும், ஆனால் அது அவ்வளவு மென்மையாக இருக்காது. 

No comments:

Post a Comment