Saturday, September 18, 2021

பெண்ணைப் பெற்றவருக்கே வரதட்சணை தர வேண்டும்

 யூத கலாசாரத்தில் திருமணம் செய்யும்போது மணமகன் வீட்டார் மணமகளுடைய வீட்டாருக்கு அவளை வளர்த்த செலவை தந்துவிட வேண்டும். மேலும் ஆண்மகன் தான் பெண்ணுக்கு நகை அணிவித்து அழைத்துச் செல்ல வேண்டும். இது மிகச்சிறந்த திருமண முறையாகும். 

ஆனால் இன்றைய நாட்களில், இத்தனை ஆண்டுகள் பெண் பிள்ளைகளை வளர்த்த பெற்றோருக்கு கடும் நெருக்கடி கொடுத்து வரதட்சணை என்னும் பெயரில் பகல் கொள்ளையடிப்பது எவ்விதத்தில் நியாயம்? இன்னொருவர் உழைப்பை/பொருளைப் பெறும்போது அதற்கான விலையைச் செலுத்தி அதைப் பெறுவதே நியாயம். பெண் என்பவள் வேலைக்குச் செல்வது, வீட்டு வேலை செய்வது, பிள்ளை பெற்று வளர்ப்பது என பல விஷயங்களில் நன்றாக விளங்கும் போது, திருமணத்தில் அவளுக்கு எவ்வளவு விலை கொடுத்தாலும் தகும்.

No comments:

Post a Comment