Tuesday, September 21, 2021

ஆபத்தான கலர் சாயம்

 நல்ல பரிசுத்தவான்களாக இருப்பது நல்லதுதான். ஆனால் சிலர், தங்கள் ஆவிக்குரிய நிலைக்கு மாறாக (அதை மிஞ்சி) தங்களை வெளிப்படுத்த முயல்வது கொஞ்சம் நெருடலை ஏற்படுத்துகிறது. நான் எந்த அளவுக்கு பரிசுத்தவானோ அந்த அளவுக்கு இந்த உலகம் என்னை அறிந்தால் போதுமானது. என்னை தூரத்தில் இருந்து பார்ப்பவர்களுக்கும் பக்கத்தில் இருந்து பார்ப்பவர்களுக்கும் நான் ஒரே மாதிரியான மனிதன் தான். தூரத்தில் என்னை பார்த்துவிட்டு என்னுடைய பொய்யான பிரதிபலிப்பை நம்பி என்னிடம் நெருங்கும் போது என் உண்மை வெளிப்பட்டு விடும். அதன் விளைவாக ஒருவரைக்கூட வாழ்நாள் நண்பனாக ஆதாயப்படுத்த முடியாது. 

அதற்காக நான் பெரிய பாவி, நான் மிக மோசமானவன் என்று சொல்வது ஓவர் பில்டப்பாகத் தெரியும். அது உண்மைக்கு மாறானதாக இருக்கும். எப்போதும் உண்மையையே பேசினால் நம் நிலை குறித்த தடுமாற்றம் பிறருக்கு வராது. முகமூடி என்றைக்கும் ஆபத்தானது தான். இங்கே பல லட்சங்கள் செலவு செய்து அணியப்படும் முகமூடி ஒரு இமைப்பொழுதில் எளிதில் கிழிந்துவிடும். அது காணொளியின் முகப்பில் உள்ள படத்திற்கும் காணொளிக்கும் தொடர்பில்லாததைப்போன்றது. 

அதுபோலவே புகழ்ச்சி என்பதும் இயல்பானதாக இயற்கையானதாக நமக்கு வரவேண்டும். செயற்கையாக நம்மைத் தூக்கிக்காட்டும் விளம்பரங்கள் நம்மை குறுகிய காலத்தில் உயர ஏற்றிவிட்டாலும் உண்மை வெளிப்படும்போது நொடிப்பொழுதில் அது நம்மைத் தாழத் தள்ளிவிடும்.

பின்குறிப்பு : நான் யாரையும் சொல்லல.

  

No comments:

Post a Comment