Monday, January 16, 2023

அந்திகிறிஸ்து என்னும் தேவையில்லாத பீதி

உபத்திரவ காலத்துல நீ இங்க இருந்தா சாப்பாடுக்கு என்ன பண்ணுவ? முத்திரை இல்லாம உன்னால் வாங்கவும் விற்கவும் முடியாதே? அப்படினு ஒரு கேள்வி மக்களே.

"எங்கள் அனுதின உணவை எங்களுக்கு அளித்தருளும்" என்னும் பரமண்டல ஜெபத்தை மறந்துவிட்டு, என்னிடம் கேள்வி கேட்பது நலமோ? 

ரகசிய வருகையை பேசுகிறவர்கள், இதை மட்டும் அல்ல. பல அடிப்படை உபதேசங்களையும் மறுதலிக்கிறார்கள். உதாரணம், பரிசுத்த ஆவியானவர் தான் நீக்கப்பட்டு விடுவாரே, நீ எப்படி விசுவாசத்தில் இருப்ப என்கிறார்கள். அதை கண்டுபிடித்த பிரசங்கியாரிடம் கேளுங்க. என் கிட்ட இல்ல.

இது போல பல தாறுமாறான உபதேசங்கள். உங்களால் ஜெயிக்க முடியாது, உங்களால் வாழ முடியாது, உண்ண முடியாது, உங்கள் பிள்ளைகள் பறந்து போய்விடுவார்கள். நாங்க முன்னாடி போறோம், நீங்க வேணும்னா பின்னாடி வாங்க, என்றெல்லாம்... 

வாட்ச்மேன் நீ போன்ற யுத்த வீரர்களைப் படித்து வளர்ந்த எங்களையா பயமுறுத்துகிறீர்கள்?கிரஹாம் ஸ்டெயின்ஸ்-ன் பிள்ளைகளுக்கு நெருப்பைக் காட்டினால் பயம் வருமோ? எரோதை நரி என்று அழைத்த இயேசுவின் பிள்ளைகளிடம் பூச்சாண்டி என்று சொல்கிறீர்களா?

தேவபெலன் என்று ஒன்று இருப்பதையும் மறந்துவிட்டார்கள். பிதாவிடம் இயேசு கெத்சமனே தோட்டத்தில் ஜெபிக்கும் வரை தான் அவருடைய கலக்கம் எல்லாம். அந்த ஜெபத்திற்குப் பிறகு இயேசு சிலுவை  வரை, மரணம் வரை தயங்காமல் சென்றார். சிலுவையில் கூட ஆத்தும ஆதாயம் செய்தார். அவரின் பிள்ளைகளையா பலவீனப்படுத்தப் பார்க்கிறீர்கள்?

இப்படிப் பார்த்தால் ரகசிய வருகை என்பது, பல வேதாகம சத்தியத்தை அடித்து சாப்பிட்டு விட்டு, ஓடு என்கிற ஒன்றை மட்டும் சொல்லி, மக்களை தவறாக வழிநடத்தும் ஒரு வரலாற்றுப் பிழை. அதைப் பிரசங்கிக்கும்போது மட்டும், வேதாகமத்தின் அனைத்து சத்தியங்களையும் மறந்துவிடும். அப்படி நினைவிருந்தால் அந்த கோட்பாடு எதுவுமே, சத்தித்தோடு பொருந்தாது. சரியானது என்னவோ, அதுவே ஆண்டவர் வாயிலிருந்து வந்தது. அதை மட்டும் நம்புவோம். இந்த "ரகசிய வருகை மற்றும் அந்திகிறிஸ்து பூச்சாண்டி" காட்டும் உபதேசியார்களை இனம்கண்டுகொண்டு தவிர்த்து விடுவோம்.

முகில்

No comments:

Post a Comment