Wednesday, January 25, 2023

சாபம் மேற்கொள்ளாதது ஏனோ?

பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்டுள்ள எல்லா சாபங்களும், ஒரு காலத்தில் மீட்பிலும் மறுவாழ்விலும் இணைக்கப்படும். உதாரணம், ஏசாயா, எரேமியா, ஓசியா ஆகிய புத்தகங்களில் தேவ மக்களுக்கு சாபமும், ஒரு புள்ளியில் மீட்பும் எழுதப்பட்டிருக்கும்.

மீட்பின் தீர்க்கதரிசனங்களைக் கூர்ந்து பார்த்தால், பல இடங்களில் "அந்நாளிலே" என்று இயேசுவின் முதலாம் வருகையைக் குறித்தும் இரண்டாம் வருகையைக் குறித்தும் சொல்லப்பட்டிருக்கும்.

இயேசு கிறிஸ்துவின் மூலம் சேர்க்கப்படும் அனைவருக்கும் மீட்பு என்பது முத்தரிக்கப்படுவதால், பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்டுள்ள சாபங்கள், புதிய உடன்படிக்கையின் பிள்ளைகள் மேல் ஆதிக்கம் செலுத்த முடியாது. 

காரணம், அவர்களுடைய சாபம், "கிறிஸ்து" என்னும் மீட்பில் முடிகிறது. நம்முடைய விசுவாசமே, நம்முடைய இரட்சகரின் மீட்பில் தான் தொடங்குகிறது. 

ஒருவேளை பழைய ஏற்பாட்டு புத்தகங்களில் சொல்லப்பட்ட சாபம் பிந்தி வந்தால், அதை முடிக்கும் வேறொரு மீட்பு நமக்கேது? பொதுவாக தேவ ஜனங்கள் மேல் சொல்லப்பட்டுள்ள எல்லா சாபங்களுக்கும் மீட்பின் திட்டம் சொல்லப்பட்டிருக்க வேண்டும். அந்த சாபங்களை மீண்டும் நமக்கென்று எடுத்தால், அதை முடிக்கும் வேறொரு மீட்பு நமக்கு இல்லாமலே போகிறது.

இதை முரண்பாட்டை முடிக்கவே, மன்னிப்பும், மன்னிக்க வேண்டும் என்ற உபதேசமும் நமக்கு அருளப்படுகிறது.

முகில்.

No comments:

Post a Comment