Monday, January 9, 2023

தடம் புரளாமல் பயணிப்போம்

பில்லி கிரஹாம் என்னும் சுவிசேஷகர், தான் மரிக்கும் வரை, தன்னுடைய பிரசங்கத்தை மாற்றவில்லை. எந்த நோக்கத்திற்காக அழைக்கப்பட்டாரோ, அதையே நிறைவேற்றினார்.

கிரஹாம் ஸ்டெயின்ஸ் ஒரிசாவில் தான் கொல்லப்படும் வரை மருத்துவ மிஷனரியாக பணியாற்றினார்.

பக்த் சிங், சாது சுந்தர் சிங், வில்லியம் கேரி என இன்னும் பலரையும் குறிப்பிடலாம். அவர்களும் தங்கள் அழைப்பில் கடைசி வரை உறுதியாக இருந்தார்கள்.

ஆனால், அகஸ்டின் ஜெபகுமார் அண்ணன், அழைக்கப்பட்டது மிஷனரி எனும்போதும், மேடைகளில் அதைக்குறித்து பேசாமல், ஏன் அரசியல், சபை பஞ்சாயத்து என மற்றவர்களைத் திட்டுகிறார்?

மோகன் சி அண்ணன் சுவிசேஷகர் என அழைக்கப்பட்ட போதும் எதற்கு அப்போஸ்தலர் போல சபைகளுக்கு அடுத்தவைகளை பேசிக்கொண்டிருக்கிறார்? சமீபத்தில் சில பிழைகளுடன் எஸ்கட்டாலஜி (வருங்காலவியல்) எல்லாம் பேசினார்.

நாம் அழைக்கப்பட்ட நோக்கத்தை விட்டு மாறும்போது, நாம் யாருக்கும் பயனில்லாமல் போவதைத் தவிர்க்க முடியாது. நாம் அழைக்கப்பட்ட நோக்கத்திற்காகவே தேவன் நம்மை பயிற்றுவித்தார். அப்படியே பயன்படுத்துகிறார். அவ்வப்போது, பல்வேறு ஊழியங்களை நாம் செய்ய நேரிடலாம். ஆனால் நாம் தேவனால் உருவாக்கப்பட்ட பிரதான நோக்கம் ஒன்றாகத் தான் இருக்க முடியும். தடம் புரளாமல் பயணிப்போம்.

முகில்.

No comments:

Post a Comment