Tuesday, January 24, 2023

தொலைநோக்குப் பார்வை

ஆபிரகாமின் தொலைநோக்குப் பார்வை, தூரத்தில் உள்ள பரம தேசத்தைப் பார்க்க வைத்தது. ஆகாரின் பார்வையோ அருகில் இருந்த துரவைக்கூட பார்க்கக் கூடாதபடி சுருங்கி இருந்தது. 

அருகில் உள்ள பிரச்சினைகள், சுற்றி உள்ளவர்களின் தாக்கம் ஆகியவைகளால் செயல்படாமல் போன அனுபவங்கள் எனக்கும் உண்டு. சங்கீதக்காரன் தனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு நேராக தன் கண்களை ஏறெடுக்கிறான். கட்டாயம் இந்த உதவி வேண்டும் என்று இருக்கும் பல வேளைகளில், ஆகார் போலவே நாமும் செயல்படுகிறோம்.

அடிமையின் சிந்தை கொண்ட ஆகார், தான் தேவனால் சுயாதீனமுள்ளவகளாக மாற்றப்பட்ட போதும், அடிமை மனநிலையில் இருந்து மாறாதவளாக, விசுவாசக் குறைவுடன் செயல்பட்டாள். 

ஆபிரகாமின் பார்வை எல்லாருக்கும் இயல்பாக இருக்க வேண்டும் என்றில்லை. ஆகார் போல அடிமையின் மனநிலையில் வளர்ந்தபடியால், தேவன் ஒருமுறை என்னுடைய கண்களைத் திறக்க வேண்டி இருக்கலாம்.

பார்வையடைய விரும்பிய அனைவருக்கும் புதிய ஏற்பாட்டில் இயேசு பார்வையளித்தார். அதுவே நமக்கான நற்செய்தி.

முகில்

No comments:

Post a Comment