Sunday, February 28, 2021

இயேசுவின் வருகைக்காக ஏன் எப்போதும் ஆயத்தமாக இருக்க வேண்டும்?

இயேசுவின் வருகைக்காக ஏன் எப்போதும் ஆயத்தமாக இருக்க வேண்டும்?

எருசலேம் சேனைகளால் சூழப்பட்டிருப்பதை நீங்கள் காணும்போது, அதின் அழிவு சமீபமாயிற்றென்று அறியுங்கள். 

லூக்கா 21:20

இந்த தீர்க்கதரிசனத்தின் முதல் பகுதி சில முறை நிறைவேறி விட்டது. இன்னும் ஒரு முறையாவது நிறைவேறும்.

இதே போல் தான் நினையாத நாழிகையில் வருவது. காலத்தை கணக்கிட்டு காலம் வரும்போது பார்க்கலாம் என்று நினைப்பவர்களுக்கு கர்த்தரே கண்ணில் மண்ணைத் தூவி விடுவார். இதே போல் தான் அவர் பிறப்பின் இடத்தை வைத்து யூதர்களுக்குச் செய்தார். எப்போதும் விழித்திருக்க வேண்டும் என்று சொல்வது இதற்கு தான்.

தேவனுடைய வசனத்தை cheat code போட்டெல்லாம் hack பண்ண முடியாது. "நினையாத நாழிகையில்" என்று சொல்லப்பட்ட வார்த்தைக்கும் "ரகசிய வருகைக்கும்" சம்பந்தமே இல்லை. "உபத்திரவ காலத்திற்கு முன்பாக எடுத்துக்கொள்ளப்படுதல்" எனப்படுவதற்கும் வசன ஆதாரம் இல்லை. வெளியரங்கமான வருகையில் மட்டுமே இந்த சம்பவம் நிகழும். விழித்திருப்பது, ஆயத்தமாக இருப்பதே நல்லது. காரணம் அது தேவ கட்டளை. காலம் வரட்டும் பார்ப்போம் என்பவர்களுக்கு காலம் வருவதும் தெரியாது, கிறிஸ்து வருவதும் தெரியாது. இருதயத்தை அவரே மந்தமாக்கி விடுவார். மனக் கண்களை குருடாக்கி விடுவார்.

இந்த ஜனங்கள் தங்கள் கண்களினால் காணாமலும், தங்கள் காதுகளினால் கேளாமலும், தங்கள் இருதயத்தினால் உணர்ந்து குணப்படாமலும், நான் அவர்களை ஆரோக்கியமாக்காமலுமிருக்க, நீ அவர்கள் இருதயத்தைக்கொழுத்ததாக்கி, அவர்கள் காதுகளை மந்தப்படுத்தி, அவர்கள் கண்களை மூடிப்போடு என்றார். 

ஏசாயா 6:10

நம் கண்கள் திறக்கப்பட்டது நம் தெரிந்தெடுப்பு அல்ல. தேவனுடைய ஈவு!

No comments:

Post a Comment